Thursday, June 30, 2016

இந்தமுறை தப்பலாம்- அடுத்த முறை என்ன செய்வன்?

ஒரு பண்டிதருக்கு வாதம் செய்ய வேண்டி வருது... அவருக்கு பயங்கர வயித்து வலி... போகலைன்னா தோல்வியை ஒத்துக்கோ எண்டுட்டாங்க... பண்டிதர் போறார் வயித்தப் பிடிச்சுட்டு....

ஒரு துரும்பைக் கிள்ளிப் பக்கத்தில போட்டுட்டு வாதம் செய்ய உட்காருறார்.... துரும்பு துடிக்குது... பண்டிதருக்கு வலி இல்லை... வாதம் முடிய துரும்பிட்ட இருந்து வலியைத் தான் வாங்கிட்டு வயித்தப் பிடிச்சுட்டுப் போறார் பண்டிதர்....

”எதுக்கு மறுபடி வயித்தப் பிடிச்சுட்டு வறீங்க? அந்தத் துரும்பிட்டையே அதை விட்டுட்டு வந்திருக்கலாமே” எண்டு கேட்கிறாங்க...

அதுக்கு அவர் ”இந்தப் பிறப்பில நான் இதை செய்யலாம்... ஆனா அந்தப் பாவத்தை அனுபவிக்கலைன்னா அதை அனுபவிக்க மறுபடி பிறக்கணுமே.... அதுக்கு இதே பரவால்ல...” எண்டுறார்...

No comments:

Post a Comment