Sunday, August 28, 2011

லவ் கண்ணா லவ்.


ஒரு தலைக் காதல் பற்றி ஒரு நண்பர் சொன்னது இது. அந்நண்பரின் அனுமதியுடன் இதனை உங்களுக்குக் கூறுகிறேன்.Bracket  கருத்துக்கள் என்னுடையவை. ஸோ நான் சொன்னதா சொல்லிக் கொண்டு நீ ஏதோ உளறி இருக்கியேன்னு கோவிக்க வேண்டாம்னு அந்த நண்பரைக் கேட்டுக் கொள்கிறேன்.நிலவை வானத்தில் பார்க்கிறோம். அவ்வாறு பார்த்துக் கொண்டே நாம் நடந்து சென்றால் நிலா நம் கூடவே நடந்து வாற மாதிரி ஒரு தோற்றப்பாடு ஏற்படும். ஆனா அப்பிடித் தான் மற்றவங்க கூடவும் நிலா போய்க்கொண்டிருக்கு என்று ஒரு குழந்தைக்குத் தெரியாது. அது மாதிரித் தான் ஒருதலைக் காதலும்.......நாம அவங்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பம். அவங்க தற்செயலாத் திரும்பும்போது நம்மைப் பார்க்க நேரிட்டாலும் என்னவோ நம்மைப் பார்க்கத் திரும்பியது போல் தான் இருக்கும். அவங்க சிரிக்கும்போது என்னவோ நம்மைப் பார்த்து சிரிப்பது போல்தான் இருக்கும்.(காவலனில் வடிவேலுக்கு அப்பால் இருந்த பெண்ணைப் பார்த்து சிரிக்க வடிவேலுக்குத் தன்னைப் பார்த்து சிரித்தது போல் தோன்றுமே.....கிட்டத்தட்ட அப்பிடித்தான். ). காதல் வந்தால் ஒரு சில பாடல்களைக் கேட்கும் போது ஏற்படும் கிறக்கம் சொல்லில் அடங்காது. அது ஒரு வகை போதை....தனி சுகம்.....சிறகு கட்டிப் பறப்பது போன்ற உணர்வு......மனதுக்குள் மழை கொட்டுவது போல் இருக்கும். காதல் வந்தால் எந்த மடையனுக்கும் கூட கவிதை வரும்......(பேப்பரும் பேனாவும் வச்சுக்கொண்டு கவிதைக்கு எதுகை மோனை தேடி முழி பிதுங்குபவர்கள் கவனத்திற்கு....). (காதலிப்பவன் எழுதும் கவிதைக்கும் காதலிக்காதவன் எழுதும் கவிதைக்கும் ஒரு வித்தியாசம் தான்.....கவிதையில் உயிரோட்டம் இருக்கும் என்றால் அது முதலாம் வகை தான்...அல்லாமல் வெறும் அலங்கார வார்த்தைகளுடன், நல்லா இருக்கு....ஆனா ஏதோ ஒண்டு குறையுதே.....என்பது போல் இருந்தால்(ஃபோ(ர்) எக்ஸாம்பிள் கவிதை என்ற பெயரில் நான் எழுதுவது) அது இரண்டாவது ரகம்தான்....ஸோ ஒருவரின் கவிதையே காட்டிக் கொடுத்திடும் அவங்க காதலிக்கிறாங்களா இல்லையான்னு...எவருமே காதலித்துக் கொண்டு நான் யாரையும் காதலிக்கலை....அப்பிடின்னு காதில (B)பொக்கே எல்லாம் வைக்க முடியாது. ஏன்னா காதில வச்சா (B)பொக்கே விழுந்திடும்.....உன் மொக்கை போதும்...மேட்டருக்கு வா என்கிறீர்களா? ஓக்கே...தங்கள் சித்தம் என் பாக்கியம்). வாழ்க்கையில் திடீர்னு ரொம்ப சந்தோசமாக இருக்கணும்னு தோன்றினா காதலியுங்க...காதல் கை நழுவினா கிடைத்த சந்தோசத்திலும் அதிக கவலை ஏற்படும்.(காதல் போதை மருந்தாக்கும். அது தானே திடீர் உற்சாகம் தரும். பிறகு ஆப்பு வைக்கும்......) ஆனா....காதலிக்கிறவங்க ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. (ஹப்பி வேஸஸ் ஒருவரின் லைஃப் டேய்ஸ் கிராஃப் கீறினா அதில் திடீர் அதிகரிப்பு ஒண்டு இருந்தா அது லவ்வால வந்தது ஆக இருக்கும்.....அடடா....கோபப்பட்டாலும் நீங்க அழகு தான்.....கூல்)....”.......இவ்வளவு இருக்கா லவ்வில? எனக்குத் தெரியாதுங்கோ....உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.....பி.கு:தயவு செய்து என்னோட மொக்கைக்காக இல்லாட்டிக்கும் நண்பரோட கருத்துக்காகவாவது இதை லைக் பண்ணிக் கொமன்ற் பண்ணுங்க...ப்ளீஸ்....இதுக்கு நீங்க கொடுக்கிற ஆதரவில் இருந்து தான் இந்த ரொபிக்கில் எழுதுவதை தொடர்வதா இல்லையான்னு நான் தீர்மானிக்கலாம்...எங்கிட்டை இன்னும் வேற நண்பர்கள் சொன்னதும் இருக்கு.....ஆதரவு கொடுப்பீங்க தானே! ஏன்னா லவ் என்பது நடைமுறைக்கு எப்படியோ எனக்குத் தெரியாது...கதைக்குறதுக்கும் எழுதுவதற்கும் இன்றெஸ்ரிங் சப்ஜெக்ட்டாமே! உண்மையா?

அச்சும்......அச்சும்.....


தும்மல் வரும்போது யாரோ நினைக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் தானே! தூசி பட்டுத் தும்மல் வந்தாலும் பிரியமானவர்கள் தான் நினைக்கிறார்கள் என்று மனதுக்குள் பீத்திக்கொள்ளும் பைத்தியக்காரக்(sorry.....sorry...இடைக்கிடை உண்மைகளும் சொல்லுவன்....மன்னிச்சிடுங்க) காதலர்களுக்கும் இது எல்லாம் பொய்....மூட நம்பிக்கை...என்று சொல்லிக் கொண்டு திரியும் பகுத்தறிவுவாதிகளுக்கும் ஒரு விசயம் சொல்லப் போகிறேன்...தும்மல் பற்றி.....அட...தூசித்தும்மல் பற்றி இல்லைங்கோ...உண்மைத் தும்மல் பற்றி...நாம யாரையாவது ஊன்றி நினைத்தால் அந்த நினைவால் எமது மூளையில் ஒரு அதிர்வு உண்டாகிறதாம்...அதன்போது நினைவு அலைகள் எனப்படும் ஒரு வகை அலை காலலாக்கப்படுமாம்...அது எங்கு சேரும் என்றால் நாம் யாரை நினைக்கிறோமோ அவர்களின் மூளையில் தும்மலைத் தூண்டும் பகுதியைத் தான்....உடனே ஒரு அச்சும்....இருபத்தாறுக்குள் ஒரு நம்பர் சொல்லு....அதை விடுங்க....எல்லாரும் நான் ஒரு அறிவாளி(??????சும்மா ஒரு மன சந்தோசத்துக்காக என்றாலும் பொய் சொன்னாத் தப்பா?) என்றதால இது நான் கண்டு பிடிச்ச விசயம்னு எல்லாரும் நினைப்பீங்க என்று எனக்குத் தெரியும்....(நோ..நோ....பேச்சுப் பேச்சா இருக்கணும்...)ஆனா இது நான் சொல்லலை..."Mesmerism & Hypnotism"
இல் தான் இருக்கு....சத்தியமா....நம்புங்க...

அதிசயம்...ஆனால் உண்மை

மூலகங்களின் கதிர்த் தொழிற்பாடு பற்றி படித்திருப்பீர்கள். ஆனாலும் நான் சொல்லப் போவது உங்களுக்குப் புதுமையானதாக இருக்கலாம். மனித உடல் கூட கதிர்த் தொழிற்பாட்டு மூலகம் போலத் தானாம். சிறிய அளவில் கதிர்களை வெளிவிட்டுக் கொண்டு தானிருக்கிறதாம்.நம்மில் சிலருக்கு சிலரைக் கண்டாலே ஆகாது. அவர்கள் நமக்கு கூடாதது எதுவுமே செய்திருக்க மாட்டார்கள். ஏனோ பிடிக்கவில்லை என்பது போல...ஆனால் சிலரை ஏன் என்று தெரியாமலே பிடிக்கும். ஆனால் அவர்கள் நமக்கு நல்லது எதுவுமே செய்திருக்க மாட்டார்கள். ஏனோ பிடிக்கிறது என்பது போல.....இதுக்கெல்லாம் காரணம் இல்லாமலில்லை. உங்கள் உடலில் இருந்தான கதிர்ப்பு இன்னொருவரின் உடலில் இருந்தான கதிர்ப்புடன் ஒத்துப் போவதாக இருந்தால், அவர்களுடன் உங்களுக்கு ஒத்துப் போகும். இல்லைன்னா மல்யுத்தம் தானுங்கோ...அது சரி சிலரை மட்டும் எல்லாருக்கும் பிடிக்குதே(என்னை மாதிரியான ஆக்கள்...ஐயோ...சும்மா ஒரு பேச்சுக்குத் தானே சொன்னன். ஏன் இப்படி ஆந்தை மாதிரி முறைச்சுப் பாக்கிறீங்க?) ஏன்? அவங்க கண்ணில மற்றவங்களுக்கு இருப்பதை விட அளவுக்கு அதிகமான ஆகர்ஸண சக்தி இருக்கெண்டு அர்த்தமாம். எங்க ஆகர்ஸண சக்தியை எப்புடி கூட்டலாம்னு என்னைக் கேட்காதீங்க. எனக்குத் தெரிந்தால் நான் இப்படியா இருப்பேன்? தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கப்பா...

1 ஏப்ரல் 2011 முட்டாள்கள் தின செய்தி


முதலில் எல்லோருக்கும் உலக முட்டாள் தின நல்(?)வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முட்டாள் தினம் என்பது வெறுமனே மற்றவர்களை நோண்டியாக்குவதற்காக அல்ல. மற்ற நாட்களில் மற்றவர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்கள் என்று விழிப்பாக இருக்கிறோமோ இல்லையோ முட்டாள் தினத்தில் விழிப்புடன் இருப்போம். இருந்தாலும் சில நேரங்களில் நாம் அசரும் நேரம் பார்த்து யாராவது நம்மை ஏமாற்றி விடுவார்கள். வாழ்க்கையில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இன்றேல்,யாராவது நம்மை ஏமாற்றி விடுவார்கள் என்ற உண்மையை இது புலப்படுத்துகின்றது. சில நேரங்களில் யாராவது அசரும் நேரம் பார்த்து நாம் அவர்களை ஏமாற்றிட முயல்வோம். அவர்கள் விழித்துக் கொண்டிருந்தால் ந்ம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்கி விடுவார்கள்.அதாவது நாம் யாரையும் ஏமாற்ற நினைத்தால் நாமே ஏமாந்து விடுவோம். யாரையும் ஏமாற்றாதீர்கள்.யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள் என்பதே முட்டாள்தினம் நம் ஒவ்வொருவருக்கும் சொல்லும் செய்தியாகும். முட்டாள்கள் சங்கத் தலைவி
(ஏமாந்தீங்களா? என்னை முட்டாள்கள் சங்கத் தலைவி என்று நம்பி.....)