Friday, July 29, 2016

மங்களம்

அன்னை அன்னை அன்னை அன்னை
அம்பிகைக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் கிற்திவைக்கு மங்களம்

தாழ்விலாத தன்மையும் தளர்ச்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியிற் கசிந்தமைந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க் கனேத போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்தியற்கையான சித்தியைத்
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாமகீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெல்லாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி யென்றும் நாமகீதம் பாடுவோம்
தர்ம சக்தி வாழ்கவென்று சந்நதம் கொண்டாடுவோம்

ஓம் திரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஸ்டி வர்தனம்
உர்வாருக மிவபந்தனாத்
ம்ருத்யோர் முக்சீய மாம்ருதாத்


ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

No comments:

Post a Comment