Thursday, November 10, 2022

பெண்ணும் மகாகாளியும்





அஷ்டாங்கயோகம் - சிவன் கதையில் இருந்து

1. இயமம்: செய்யும் வேலையை உணர்ந்து செய்தல். மன ஒருமைப்பாடு. செயல்களில் ஏற்படும் தூய்மை -> எண்ணங்களில் தூய்மையை கொடுக்கும் (உணர்ந்து குளித்தல்)

         1. அகிம்சை: செயலிலோ அல்லது நினைப்பிலோ பிறருக்கு ஊறு விளைவிக்காத செயல். (கொல்லாமை) - (பாம்பை கொல்லாமல் கை கூப்பி வணங்கி செல்ல அனுமதித்தல்)

         2. சத்தியம் (வாய்மை): பொய் சொல்லாமலும் நேர்மையுடனும் திகழ்தல். குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காமை. இந்த முதல் இரண்டுமே பிரதான இயமங்கள்.

         3. கள்ளாமை: திருடல் இன்மை

         4. காமமின்மை: பாலியல் உணர்வைத் தவிர்த்து சக்தியைத் தேக்கி வைத்தல்

         5. பேராசையின்மை

2. நியமம்:  ஒழுக்க விதிமுறைகளை வழுவாது கடைப்பிடித்தல். உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருத்தல், தவம், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல், தான் பசித்தும் பிற உயிருக்கு உணவளித்து மகிழ்தல் போன்றன நியமத்துள் அடங்குகின்றன.

3. ஆசனம்: இறையை எண்ணி தீப ஒளியை பார்த்து சுக துக்கம் மறந்து தியானம் செய்தல். குரு தீட்சை, காலை நீட்டி அமர்ந்து கைகளால் காலை தொடுதல், மரம் ஒன்றின் முன் நின்று, மனதை மரத்தில் வைத்துக் கொண்டு கையை கூப்பியபடி ஒற்றைக் காலில் நிற்றல், பத்மாசனத்தில் அமர்ந்து கைகளை மேலே கூப்பி மலை போல் ஆகுதல்

4. பிரணாயாமம்: மூச்சுப் பயிற்சி. தொடர்ந்து செய்ய வேண்டும். சக்தியை தாங்க உடம்புக்கு வலிமை தேவை. ஆன்மிக சக்தி ஒருங்கிணைப்பு.

5. பிரத்தியாகாரம்: மகா முத்திரை. ஓம். சாம்பவ முத்திரை. மூன்றாம் கண்ணை உணர்ந்து தியானித்தல். ஆத்ம சக்தியை செயற்படுத்த தொடங்குதல்.

6. தாரணை: ஒரு பொருளின் குணநலன்கள் மீது ஒருமைப்பாடு கொள்வதால் அந்த பொருளின் குணநலன்கள் கிடைக்கும். தாமரையை பார்த்துக் கொண்டு அதன் குணநலன்கள் மீது கவனம் பதித்து, ஓம் என்று கூறிக் கொண்டு மூச்சு செல்லும் வழியை கவனித்தல் (மூச்சு, உடலின் எந்தப் பகுதியில் எங்கு சென்று சேர்கிறது)

7. தியானம்: தனக்குள் இறையை உணர்தல்

8. சமாதி: சுயநலம், உணர்ச்சி, எண்ணங்கள் இருக்க கூடாது

Tuesday, November 1, 2022

Cat Lover

பூனைகளை வளர்ப்பவர்களுக்கு தெரியும். என்றோ ஒரு நாள் அது ஓடித் தான் போய்விடும் என்று. மறந்து விட முடியாத நேசத்தை அதன் மீது வைத்துவிடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையாக இருப்போம். அவை எம்மை சுற்றி சுற்றி வந்து, நம்பிக்கையை வெல்லத் துடிக்கும். என்றாவது ஒரு நாள் விடிகாலையில் கண்விழிக்கும் போது அதை எவ்வளவு நேசிக்கிறோம் என்று தெரிந்து கொள்வோம்.

அதன் கட்டளைகளை சிரமேற் கொள்வோம். மியாவ் என்ற சத்தத்துக்கு, அழுகிறதென்றும் சிரிக்குறதென்றும் பசிக்கிறதென்றும், ஒரு அன்னையைப் போல பேதமான அர்த்தங்களை அறிவோம். கடவுளிடம் கூட பகிரமுடியாத, காதலின் கண்டுகொள்ளாத தன்மையையும் ஊடல்களையும் காமடி என்ற பெயரிலான காயப்படுத்தும் வார்த்தைகளையும் கூட நம்பி சொல்லி வைப்போம். யார் இல்லாது போனாலும் அது இருக்கும் என்று இறுமாப்பு கொள்ளும் ஒரு நாளில் அது ஓடிப் போகும்.
கண்ணீர்-ஏமாற்றம்-விரக்தி. ஆசையாய் வளர்த்த பூனை இன்னொரு வீட்டில் அசைவ உணவுண்ணுவதை காண கிடைக்காதவர்கள் பாக்கியசாலிகள். "இனியொரு பூனைக்கு என்வாழ்வில் இடமில்லை" என்று திடசங்கற்பத்துடன் உறுதிமொழிகளை எடுத்துக் கொண்ட பின்னர், இன்னொரு பூனை எங்கிருந்தோ வரும். "இங்கிதனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்று எண்ண வைக்கும். இதுவும் என்றோ ஒரு நாள் ஓடி தான் போய்விடும் என்று தெரிந்தே எந்தக் கவலையும் இல்லாது நேசிப்போம்.
நாய்கள் விசுவாசமானவை. தாலி கட்டிய கணவன் என்று வாழும் எங்கள் பெண்களை போல, நாம் கொடுக்கும் ஒரு பங்கு உணவை அன்பென்று நம்பி-அதை விட பல மடங்கு அன்பைத் திரும்பக் கொடுப்பவை. அவற்றை நேசிப்பதில் என்ன இருக்கிறது? ஒரு பங்கு முதலில் பத்து பங்கு கிடைக்கும் வியாபாரம் அது. அவற்றுக்கும் வேறு வழியில்லை. சுதந்திரமாக வேட்டையாடி வாழ்ந்த அவற்றை, தமது வேட்டைக்கு என்று பழக்கி, பின்னர் தமது தனிமைக்கு என்று வளர்த்து, மனிதர்கள் அவற்றின் சுயத்தையே அழித்து விட்டார்கள். தம் சுயத்தை தொலைத்த அவை, வேறு வழியில்லாமல் மனிதர்களை சார்ந்தே வாழவேண்டிருக்கிறது.
அன்பையும் விசுவாசத்தையும் உணவுக்கு பதிலாகக் கொடுப்பது தான் தமது வாழ்வின் அர்த்தம் என்று எண்ணிக்கொண்டு நாய்கள் வாழ்கின்றன. முதலாளிகள் கொழிக்க உழைப்பைக் கொடுக்கும் வர்க்கம் போலவே நாய்கள். பூனைகள் அப்படி அல்ல. திமிர் பிடித்தவை. சுய கவுரவம் அதிகம். உண்பதற்கும் உறங்குவதற்கும் தமக்கென்று ஒரு தரநிலையைக் கொண்டவை. தமது தரநிலைக்கு கீழானவற்றைத் திரும்பியும் பார்ப்பதில்லை.
ஓடி தான் போகும் என்று தெரிந்தும் பூனைகளை நேசித்து இருக்கிறீர்களா? தனது உணவுக்காக வேட்டையாட தெரிந்தும் , அவை உங்கள் கவனத்துக்காகவும் நீங்கள் போடும் உணவுக்காகவும் காத்திருந்திருக்கிறதா? தொலைந்து போன பூனைக்குட்டி திரும்ப வந்ததாய் கனவு கண்டு இருக்கிறீர்களா? பக்கத்து வீட்டுப் பூனை கத்தியதை, "உனது பூனையா" என்று அன்னை சொல்ல, "இல்லை, அதன் குரல் வேறு" என்று சரியாகக் கணிக்க முடிந்திருக்கிறதா? புதிதாக ஒரு பூனை வந்த பிறகு, உங்களுக்கு என்றோ பிடித்திருந்த பழைய பூனையின் தோற்றத்தையும் இயல்புகளையும் புதிய பூனையில் தேடாமல் நேசிக்க முடிந்திருக்கிறதா? நிபந்தனையற்ற அன்பைக் கொடுக்க முடிகின்றமைக்காய் நீங்கள் என்றென்றைக்கும் பெருமை கொள்ளலாம்.

Sunday, July 10, 2022

Mens பட விளக்கம்

Mr.tamilan விளக்கம்

எனது விளக்கம்

"ஆம்பிளை எண்டா எப்பிடியும் இருக்கலாம். என்னவும் செய்யலாம். அதுக்கு பொண்ணுங்க அடங்கி போகணும்" எண்டு ஒரு மூட நம்பிக்கை இருக்கு. மூட நம்பிக்கையோட இருக்கிறவன் ஒரு மரம் மாதிரி. அவனுக்கு சூடு சுரணை இராது. சொந்தமா யோசிக்க முடியாது. அதனால தான் மரம். அந்த நம்பிக்கை உள்ள எல்லா ஆண்களும் ஒரே குணத்தை தான் பிரதிபலிப்பாங்க. பெரும்பாலும் நிறைய பேர் அப்பிடி தான். அதால தான் அந்தம்மா புருஷனின் முகத்தை எல்லா ஆண்களிலும் வைச்சாங்க. கவனிக்கவும். நல்ல ஆண்களும் இருக்கலாம். ஆனா அந்தம்மா சந்திச்ச எல்லா ஆணும் மோசம். அந்த மூட நம்பிக்கை வேற வேற ஆக்களுக்கு இருக்கும் போது அவங்க தங்கட புத்தியை எப்பிடி காட்டுவாங்க எண்டது தான் வித்தியாசமான பாத்திரங்கள்.

முதல்ல அந்த மூட நம்பிக்கையை சமூகம் கொடுக்குது. அதன் விளைவா அந்த சின்ன பையன் பிறக்கிறான். பிறக்கிறான்  எண்டு உருவாகிறான். அந்த பொண்ணை கடுமையா பேசுறான். அது தான் மோசமான நடவடிக்கையின் முதல் நிலை. அவனுக்கு சமூகத்தில மதிப்பு இல்ல. அவன் மோசமான நம்பிக்கை போட்ட மலம். அதான் பின்னால இருந்து வாரான். அவனால திட்ட மட்டும் தான் முடியும். அடுத்தது அவனுக்கு பாதிரியார் பிறக்கிறார். மற்றவனுக்கு அறிவுரை சொல்லுற நிலையில உள்ளவர். சமூகத்தில மரியாதை இருக்கு. மோசமா பேசுற ஒருவனிடம் இருந்து நன்மையை அனுபவிக்கனும் எண்டா அவனுக்கு ஜால்றா அடிச்சா தான் முடியும். அந்த மாதிரி ஜால்றா அடிச்சு இன்னொருவருக்கு அறிவுரை சொல்லுற நிலைக்கு வந்த ஒருத்தன் "ஆண்களுக்கு அடங்கி போ" எண்டு தான் இன்னோராளுக்கு அறிவுரை தான் சொல்லுவான். "எதிர்த்து நில்" எண்டு சொல்ல மாட்டான்.  தொப்புள் கொடி எண்டுறது அவனால இவன் இப்பிடியான நிலைக்கு வந்திருக்கிறான் எண்டதுக்கு. அது ரெண்டாவது மோசமான நிலை. 

அப்பிடி போதனை செய்யுற ஆக்கள் தான் அந்த ஓனர் மாதிரி ஆட்களுக்கு முதுகெலும்பு. அவனுக்கு சொத்து இருக்கு. அதை வைச்சு அந்த பொண்ணை துரத்துறான். "அவனை மாதிரி மோசமான ஆண்கள் வாழுற உலகத்தில தனியா வாழ ஏலாது. அதனால கொடுமை படுத்துற புருஷன் இருந்தாலும் அட்ஜர்ஸ்ட் பண்ணி தான் ஆகணும்" எண்டு சொல்லுற தைரியத்தை ஒரு புருசனுக்கு கொடுக்குறது அந்த ஓணர் மாதிரி ஆக்கள் தான்.  அதனால தான் அவன்ர வாய் வழியா அந்தம்மாட புருஷன் வாறான். இதான் மோசமான ஆண்களின் கதை.