Monday, July 23, 2018

நிம்மதிக்கு வழி

ஒரு அரசன் மிகவும் வேலைப்பளுவை உணர்ந்தான்.. அதனால் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. அவனை தேடி ஒரு ஞானி வந்தார்.. அவரிடம் பிரச்சனையை சொல்லி தீர்வு கேட்டான்.. அவர் "இந்த நாட்டை எனக்கு தந்து விடு.. உனக்கு கவலை தீரும்" என்றார்.. அவன் சம்மதித்தான்.. "இதை தந்து விட்டு.. எங்கு போவாய்.. வேறு என்ன வேலை தெரியும்.. எனக்காக இந்த நாட்டை ஆட்சி செய்.. நான் வேறு இடங்களுக்கு போய் விட்டு வருகிறேன்.. எனக்கு நீ என்னென்ன செய்தாய் என்று கணக்கு காட்டு போதும்" என்றார்..

சிறிது காலத்துக்கு பின்னர் திரும்பி வந்தார்.. அரசன் மகிழ்வுடன் வரவேற்றான்.. கணக்குகளை காட்டினான்.. தற்போது கவலையின்றி இருப்பதாக சொன்னான்.. ஞானி புன்னகைத்தார்.. "நீ முன்பு செய்த வேலைக்கும் இப்போது செய்வதற்கும் ஏதும் சம்மந்தம் உள்ளதா" என்று கேட்டார்.. "ஏதும் இல்லை.. " என்றான்.. "நீ வேலைகளை உன் தலையில் கட்டிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த காரணத்தால் பளுவாக உணர்ந்தாய்.. இப்போது எனக்கு வேலை செய்வதாக நினைத்தாய்.. நிம்மதி பெற்றாய்.. அது போலவே நான் செய்ய வேண்டும் என்று செய்யாமல் கடவுளுக்கு செய்யும் கடமையாக செய்ய வேண்டும்.. செயல்களின் விளைவுகள் நன்மையோ தீமையோ அது கடவுளுக்கு என்று எண்ண வேண்டும்.. அதாவது நான் ஒரு கருவியே.. வேலைக்காரன்.. தந்த வேலையை செய்கிறேன்.. அதன் விளைவு கடவுளை தான் பாதிக்கும்.. அவன் தான் எஜமானன் என்று எண்ண வேண்டும்.. அதுவே நிம்மதிக்கு வழி" என்றார்..

No comments:

Post a Comment