Monday, July 23, 2018

குழந்தை வளர்ப்பு

கோபாலனது நேசரி வகுப்பு முதலாவது நாள்.. அவனுக்கு கொடுத்த கதிரையில் சின்ன ஆட்டம் ஒன்று இருந்தது.. சிறுவன் சமாளித்து இருக்க முயற்சிக்கிறான்.. பின்னால் இருந்தவன் கதிரையை பிடித்து கொண்டு பெயர் கேட்கிறான்.. திரும்பி பெயர் சொல்ல முனைந்தபோது கதிரை சமநிலை குழம்பி விழுந்து கோபலனும் கதிரையும் தரையில் கிடக்கிறார்கள்.. கதிரையின் கால் உடைந்து விட்டது.. கோபாலனுக்கு சின்னதாக சிராய்த்து விட்டது சீமெந்து தரை.. ஓடி வந்த ஆசிரியை, கோபலனுக்கு கதிரையை உடைத்ததுக்கு தண்டனையாக தடி ஒன்றை முறித்து பூசை செய்து விடுகிறார்.. புதிய கதிரை கொடுக்க படுகிறது..

கோபாலனுக்கு என்று ஒரு சிறிய கதிரை வீட்டில் இருக்கிறது.. அவன் சிரமப்பட்டு பெரிய கதிரையில் இருக்க ஆரம்பிக்கிறான்.. தந்தை இதனை அவதானிக்கிறார்.. காரணத்தை கேட்கிறார்.. "அது கக்கா கதிரை.. அதில இருந்தா உடையும்" தந்தைக்கு ஆச்சரியம்.. உடையுமா... பரிசோதித்துப் பார்க்கிறார்.. அது ஒழுங்காகத்தான் இருக்கிறது.. என்னவோ நடந்திருக்கிறது என்று அவருக்கு புரிகிறது.. ஆசிரியையை சந்தித்து கதைக்கிறார்.. ஆசிரியை உடைந்த கதிரை பற்றி அதிகம் கதைப்பது அவருக்கு புரிகிறது.. கதிரைக்கான பணத்தை கொடுத்து விட்டு வெளியே வருகிறார்..

கோபாலன் புதிய பள்ளிக்கு அனுப்ப படுகிறான்.. சிறிய கதிரை உடைந்து விடும் என்ற அவன் எண்ணத்தை பிழை என்று நிரூபித்துக் காட்டுகிறார்.. குழந்தைகளை அவதானிக்க வேண்டும்.. கேள்வி கேட்க வேண்டும்.. அது சொல்வதை நம்ப வேண்டும்.. நம் பிள்ளைகளை அவதானிக்காது, நம்பாமல், அவை கூறுவதை கேளாமல் விடுவது பிற்பட்ட காலங்களில் அந்த குழந்தையை, அதற்கும் உங்களுக்குமான உறவை, அதனோடு பழகுபவர்களை பாதிக்கும்.. ஐந்தில் நாம் கவனிக்காது விடும் விடயங்கள் ஐம்பதில் பூதமாக வெடிக்கும்..

No comments:

Post a Comment