Showing posts with label விலேஜ் விஞ்ஞானி. Show all posts
Showing posts with label விலேஜ் விஞ்ஞானி. Show all posts

Saturday, May 27, 2017

குழந்தைப் பிள்ளைகளுக்கு வைக்கும் பொட்டு செய்யும் முறை

அரிசிக்குறுணியை வறுத்து கறுத்து வர அதற்குள் நீர் ஊற்றி சிரட்டைக்குள் ஊற்றிக் காய விடல்

குழந்தைப் பிள்ளைகளுக்குத் தலை பிடித்தல்

குழந்தைப் பிள்ளைகளுக்குப் பின் தலை பிடித்து விட வேண்டும்.. இல்லையென்றால் அது நேராக இராது.. தவளத் தொடங்கும் போது பின் தலை நீளத் தொடங்கும்..

1. ஏணைக்குள் படுக்க வைக்க வேண்டும்
2. தட்டையான கோப்பையின் மேல் மெல்லிய தலையணை இட்டு அதன் மேல் பிள்ளையைப் படுக்க வைக்க வேண்டும்

வயிற்றுப் புண்

1.        வாழைக் குருத்து அரைத்த விழுது 2 தேக்கரண்டி, மோர் 200மிலீ, 2 தேக்கரண்டி தேசிப்புளி கலந்து குடிக்கவும்
2.        மணத்தக்காளிக் கீரை சாப்பிடவும்
3.        கீழ்க்காய்நெல்லி, குப்பைமேனி, ½ தேக்கரண்டி கஸ்தூரிமஞ்சள் அரைத்துப் பாலோட குடித்தல்.. காலையில் சாப்பிட முன் எனில் இரவு சாப்பிட்ட பின் குடிக்கவும்

4.        தினமும் இரவு வெந்தயம் ஊறப் போட்டு காலையில் வெறுவயிற்றில் விழுங்கவும்

மாதவிடாய் பிரச்சினைகள்

1. வயிற்று வலி

வேப்பங்குருத்து 5, இஞ்சி, 1 உள்ளிப் பல்லு, ½ தேக்கரண்டி மஞ்சள், 9 மிளகு சேர்த்து அரைத்து உருண்டைகளாக்கி விழுங்கவும் 

2. வெள்ளை படுதல்


1.   விடத்தல் இலை, அரிசிமாவில் களி சாப்பிடவும்
2.   வேர்க்கொம்புத் தூள் தினமும் காலையில் சாப்பிடத் தீரும்
3.   உள்ளி வறுத்து சாப்பிடத் தீரும்
4.   வேப்பங்குருத்து, மஞ்சள் அரைத்து விழுங்கவும்


 3.    அதிக உதிரப் போக்கு


 a)        பொருத்துமான் இலை பிட்டு
b)       பழுத்த பூவரசம் இலை பிட்டு
இலையை இடித்து இலை நரம்புகளை நீக்கி சுத்தம் செய்து மாவோடு கலந்து பிட்டு அவிக்க வேண்டும்.. நல்லெண்ணெய் விட்டு சாப்பிட வேண்டும்

Friday, July 1, 2016

மருந்து காய்ச்சும் எண்ணெய்

மருத்துவப் பொருட்களை எண்ணெயாக உபயோகிக்க காய்ச்சும் எண்ணெயாக நல்லெண்ணெய் பயன்படும்.. இது தோலில் உள்ள துவாரங்களைத் திறந்து மருந்துப் பொருள் சேர உதவும்... தேங்காய் எண்ணெய் துவாரங்களைப் பூட்ட வல்லது..

மூக்குக்குள் ஏதாவது போனா.........

சின்னப் பிள்ளைகள் மூக்குக்க ரெஜிபோம், கடலை மாதிரியான சின்ன சின்னப் பொருட்களை ஓட்டிடிச்சு எண்டா பயப்பிடாதீங்க...

எந்தப் பக்க மூக்குக்க போச்சோ, மற்ற மூக்குத் துவாரத்தை அடைச்சுக் கொண்டு வாய்க்குள்ள ஊதினா வெளிய வந்திடும்...

பூச்சித் தொல்லைக்கு

வயிற்றில் ஏற்படும் பூச்சியால், பசியின்மை, கண் கடித்தல், மலவாசல்-சலவாசல் கடித்தல், வாந்தி வருவது போன்ற உணர்வு, கைகால்களில் அரிப்பு போன்றன ஏற்படும்..

இதற்கு வெந்தயம் விழுங்கிவர சரியாகிவிடும்...

வெந்தயம் முகப் பொலிவைத் தரும்...

மலம் வெளியேறலை சீராக்கும்...

தலைமுடி உதிர்தலை நிறுத்தும்...

உஸ்ண தேகம் கொண்டோர் வைத்திருக்க வேண்டிய கைமருந்து....

ஆஸ்மா நீங்க..

10 கிராம் பிரமதண்ட (குடியோட்டிப்பூண்டு) வேரை அரை லீற்றர் நீரில் அவித்து கால் லீற்றர் ஆகும் வரை காய்ச்சி ஆறவிட்டு 48 நாள் அந்தி, சந்தி குடித்தால் ஆஸ்மா நீங்கும்.

முட்டு நீங்க

கற்பூரவள்ளி, தேன், சின்ன வெங்காயம் மூன்றையும் நன்றாகக் காய்ச்சிப் பருகவும்..

வாய்வுத் தொல்லைக்கு...

வாய்வுத் தொல்லையால் நெஞ்சுக்குள் குத்துதல், உடற்பாகங்கள் துடித்தல், விக்கல் முதலிய பல பிரச்சினைகள் வரும்...

இதற்கு பெருங்காயம் சிறிதளவு எடுத்து பல்லில் படாமல் விழுங்கினால் சரியாகிவிடும்...

கட்கட்டி

கட்கட்டிங்குறது கண்ணு வீங்கி வாற ஒரு தொற்று வியாதி... இதுக்கு பூனை ஒன்றின்ர வாலால கண்ணில தடவிட்டு வர மாறிடும்....

பாலுண்ணிக்கு மருத்துவம்

பாலுண்ணி எண்டுறது கறுப்பா கட்டி மாதிரி உடம்பில வளரக்கூடிய ஒரு பொருள்.... அதுக்கு தலைமுடியால சுத்திக் கட்டினா ரெண்டு கிழமைல விழுந்துடும்....  நம்புங்க.... நான் ட்றை பண்ணினன்....