Monday, July 23, 2018

துன்பம் தாங்குவது எப்படி

பண்டிதர் ஒருவர் வாதம் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவருக்கு கடுமையான வயிற்று வலி. வயிற்றைப் பிடித்துக் கொண்டு போய் அமருகிறார். வாதம் தொடங்க முதல் பக்கத்தில் இருந்த செடி ஒன்றின் அரும்பை கிள்ளி போடுறார். பண்டிதரின் வயிற்று வலி பறந்து போகுது. கிள்ளி போட்ட அரும்பு துடிக்க ஆரம்பிக்குது. வாதத்தில் வெற்றி பெற்றுவிட்டு மறுபடி அந்த அரும்பை கையில் தூக்குறார். இப்ப பண்டிதரின் வயிறு பழைய பல்லவியை ஆரம்பிக்குது. அரும்பின் துடிப்பு அடங்கி விடுகிறது.

ஒருத்தன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான். பண்டிதரிட்ட கேட்கிறான். "ஏன்யா.. மறுபடியும் வயிற்றுவலியை வாங்கிக் கொண்டாய்.. அதை அரும்பிட்டையே விட்டுட்டு போயிருக்கலாமே" என்று. பண்டிதர் சொல்கின்றார்.. "இதை பாருப்பா.. இந்த பிறப்பில எனக்கு இந்த மாதிரி வலியை மாத்தி விட தெரிஞ்சிருக்கு.. இப்ப என்னோட வசதிக்கு மாத்தி விட்டிடலாம்.. ஆனா, இந்த வினையை அனுபவிக்க மறுபடியும் பிறந்து வர வேண்டி ஆகிடும். அதனால இப்பவே இதை வைச்சுக்குறன்"

துன்பங்கள் நேரும் போது, வினைப்பயன்.. இப்போதே என் பாவங்கள் அழிகின்றன என்று அதை ஏற்றுக் கொள்வாய் மனமே

No comments:

Post a Comment