Friday, July 29, 2016

மங்களம்

அன்னை அன்னை அன்னை அன்னை
அம்பிகைக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் கிற்திவைக்கு மங்களம்

தாழ்விலாத தன்மையும் தளர்ச்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியிற் கசிந்தமைந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க் கனேத போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்தியற்கையான சித்தியைத்
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாமகீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெல்லாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி யென்றும் நாமகீதம் பாடுவோம்
தர்ம சக்தி வாழ்கவென்று சந்நதம் கொண்டாடுவோம்

ஓம் திரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஸ்டி வர்தனம்
உர்வாருக மிவபந்தனாத்
ம்ருத்யோர் முக்சீய மாம்ருதாத்


ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

நவக்கிரகம்

சூரியன்
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்

சந்திரன்
எங்கள் குறைகளெல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுராபோற்றி

செவ்வாய்
சிறப்புறு மணியே செவ்வாய்த்தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு

புதன்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடி போற்றி
பதந்தந்தருள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி

வியாழன்
குணமிகு வியாழக் குருபகவானே
மனமுள வாழ்வு மகிழ்வுடனருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப்பா குருநேசா
க்ரகதோசமின்றி கடாக்சித்தருள்வாய்

சுக்கிரன்
சுக்கிரமூர்த்தி சுபமிகயீவாய்
வக்ரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளி சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

சனி
சங்கடந்தீர்க்கும் சனிபகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகாநெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தாதா

ராகு
அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாதருள்வாய் கஸ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கனியே ரம்மியா போற்றி

கேது
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம்போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி

கேதுத் தேவே கேண்மையாய் ரக்சி

Monday, July 18, 2016

லலிதா நவரத்தினமாலை

ஆக்கும் தொழில் ஐந்தரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேச்வரி போல்
சேர்க்கும் நவரத்தினமாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே

வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கனவானதவம்
பெற்றும் தெரியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியாமுதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

முத்து
முத்தே வரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம் சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய்நீ
சாகாதவரம் தரவே வருவாய்
மத்தேறுததிக் கிணை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பவளம்
அந்தி மயங்கிய வானவிதானம்
அன்னைநடம்செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோ
தேம்பொழிலாமிது செய்தவளாரோ
எந்தையிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுத்தாள்
மந்திர வேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாணிக்கம்
காணக்கிடையாக் கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவளை நாடாதவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
ஸ்ருதி ஜதிலயமே இசையே சரணம்
அரஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

கோமேதகம்
பூமேவியநான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய்மொழியே தருவாய் தருவாய்
மாமே குவிலே வளர்கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விலாஸ வியாபினி அம்மா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவீ சந்த்ரக லாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருதஸ் வரூபிணி நித்திய கல்யாணி
மஞ்சள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

வைடூரியம்
வலையொத்தவினை கலையொத்தமனம்
மருளப் பறையா றொலியாந்தவதாய்
நிலையற்றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரந்தருவாய்
அலைவற்றசைவற் றநுபூதி பெறும்
அடியார் முடிவாள் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வாரவரே

ஜெய சிவரமணீ குருகுவர ஜனனீ – ஜெய மனவன ஹரிணீ
ஜெய ஓம் சிறீ மாதா- மாதா – ஜெய ஜெய ஜெகன் மாதா

மாதா ஜெய ஓம் சிறீ மாதா – மாதா – ஜெய ஜெய- ஜெகன் மாதா

ஓம் சிறீ ஜெயஜெயஜெய சக்தி

ஓம் சிறீ ஜெயஜெயஜெய சக்தி
ஓம் சிறீ ஜெயஜெயஜெய சக்தி
ஜெய ஜெய அனுதினம் பாடிப் பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதியைத் தா..  (ஓம்..)

திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க
தேவையெல்லாம் அடைய அம்மம்மா
தேவையெல்லாம் அடைய
பக்தி பெருகிட பாடி உருகிட
பணிப்பாய் அன்பிலெம்மை.. (ஓம்..)

இரண்டுகள் போக மூன்றுகள் அகல
ஈஸ்வரி வரமருள்வாய் அம்மம்மா
ஈஸ்வரி வரமருள்வாய்
கரங்குவித்தோம் இனிக் காலைவிடோமடி
கருணையுடன் அணைப்பாய்.. (ஓம்..)

காசினியெங்கும் வேற்றுமை போக
கருத்தினில் அன்பருள்வாய் அம்மம்மா
கருத்தினில் அன்பருள்வாய்
தேசுடன் வாழ வழிகாட்டிடுவாய்
ரக்சி தேவியுன் அடைக்கலமே.. (ஓம்..)

நமஸ்காரம் கூறிக் கருத்தினில் ஞான
நல்லொளி தீபம் வைத்து ஞான
நல்லொளி தீபம் வைத்து
நமஸ்காரம் செய்து ஹாரத்தி செய்தோம்

ஞாலத்திற்கமைதியைத் தா.. (ஓம்..)

உண்மையென்றுணர்ந்த நெஞ்சில் ஓடிவந்து நிற்பவள்

உண்மையென்றுணர்ந்த நெஞ்சில் ஓடிவந்து நிற்பவள்
நன்மை செய்பவர்களுக்கு ஞானதீபம் ஆனவள்
மென்மையான பண்பினோடு மேவும் அன்புக் காவியம்
பன்மை ஒன்றும் பாங்கில் வந்த பாரின் அன்னை வாழ்கவே

சொல்லடங்கி நின்ற போதில் தூய்மைத் தோற்றம் கொண்டவள்
பல்லுயிர்க்குள் ஊறி நிற்கும் பாசமென்னும் தேசவள்
அல்லலுற்று அழைப்பவர்க்கே ஐயம் நீக்குகின்றவள்
வல்லமைக்கோர் எல்லை என்னும் மாண்பின் அன்னை வாழ்கவே

சோதனைகள் நூறுகோடி சூழவந்தபோதிலும்
நீதி உண்மை தன்னில் ஒன்றி நின்றிருக்கும் திண்மையில்
ஜோதியாகத் தோற்றங் கொண்டு தோள்வலிக்குள் வாழ்பவள்
காதணிந்த சக்கரத்தின் கற்பின் அன்னை வாழ்கவே

அரகரோகரா தாயே அரகரோகரா
அரகரோகரா தாயே அரகரோகரா
அன்னைதுர்க்கை அம்பிகையே அரகரோகரா
எம்மையாளும் ஈஸ்வரியே அரகரோகரா
என்றும் இன்பமானவளே அரகரோகரா
அன்பர்களின் இரட்சகியே அரகரோகரா
அவலவினை தீர்ப்பவளே அரகரோகரா
தெல்லிநகர்ச் செல்வதியே அரகரோகரா
தீனர்களின் தயாபரியே அரகரோகரா
சங்கு சங்கர நாயகியே அரகரோகரா
எங்கள் அன்னபூரணியே அரகரோகரா
அரகரோகரா தாயே அரகரோகரா

அரகரோகரா தாயே அரகரோகரா

புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி

புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்
நவநவமாய் வடிவெடுக்கும் மகேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி
பண்ணமைக்கும் நாவுனையே பாடவேண்டும்
எண்ணமெல்லாம் உன்னினைவே ஆகவேண்டும்

கவலைகளைத் தீர்த்துவிடும் காமேஸ்வரி
காரிருளில் தீச்சுடரே ஜோதீஸ்வரி
நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சினில் திருநாமம் வழிய வேண்டும்
துன்பமெல்லாம் போக்கிடும் துர்க்கேஸ்வரி
தொழுதகைக்கு வளமளிக்கும் ஞானேஸ்வரி
கற்றதெல்லாம் மென்மேலும் பெருகவேண்டும்
கவிதையிலே உன்நாமம் வழிய வேண்டும்

பார்வையிலே பரிமளிக்கும் பரமேஸ்வரி
பக்தர்களின் துதி சுமக்கும் கமலேஸ்வரி
சுற்றமெல்லாம் நீடூழி வாழவேண்டும்
தொல்லை இந்த வாழ்வை விட்டு ஓடவேண்டும்
இன்பமான அமைதி எங்குமோங்க வேண்டும்
இதயமெல்லாம் ஈசன் கோயிலாக வேண்டும்
மண்வளமும் மனவளமும் பெருக வேண்டும்

மாநிலத்தில் உன் கருணை வழிய வேண்டும்

உன்னுடைய பார்வையொன்றே உறுதுணையாய் வருகுதம்மா

உன்னுடைய பார்வையொன்றே உறுதுணையாய் வருகுதம்மா
கும்மிருட்டுப் பாதையிலும் பேரொளியாய்த் தெரியுதம்மா
என்னுடைய ஆட்டமெல்லாம் நீயமைத்த மேடையிலே
இசைவதும் அசைவதும் நின் கடைக்கண் ஜாடையிலே

சிற்றிடையில் சிவந்தபட்டு திருக்கரத்தில் திரிசூலம்
நெற்றியினில் செந்தூரம் நீள்விழியில் கருணைமழை
தெல்லிநகர்த்துர்க்கை அம்மா உன்னழகைப் பார்ப்பதற்கு
என் முகத்தில் அமைந்திருக்கும் இருவிழியால் இயன்றிடுமோ

சிங்கத்திலே நீவந்து சிறியேமைக் காத்திடுவாய்
எங்கள்பல குறையனைத்தும் ஈன்றவளே நீயறிவாய்
சிறியேங்கள் அழைத்தகுரல் திருச்செவியில் ஏற்றருள்வாய்
அறிவேதும் இல்லாதேம் அன்பு மொழி கேளுமம்மா

அம்பிகையே உலகீன்ற ஆரணியே காரணியே
செம்பவளமேனியளே சிவக்கொழுந்தே வந்தருள்வாய்
அணுவாகி உயிராகி ஐம்பூதப் பொருளாகி
துணையாகி எமைக் காக்கும் துர்க்கை அம்மா வந்தருள்வாய்

சுற்றி நிற்கும் உலகமெல்லாம் துர்க்கை என்று சொல்லுதம்மா
சூழ்ந்திருக்கும் உலகமெல்லாம் துதிக்குதம்மா உன்புகழை
வாழ்ந்திருக்கும் காலமெல்லாம் வணங்கிடுவேன் உன்னடியை
வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் உன்னருளை

கேட்டவரந்தந்தருள்வாய் கேதார நாயகியே
சூட்டுமலர்த்தாள் சரணம் சுந்தரியே சரணமம்மா
சர்க்கரையாய் முக்கனியாய் தமியேங்கள் மனத்தினிக்கும்

துர்க்கா மகேஸ்வரியே சரணமலர் சரணமம்மா!

கந்தவீரமாகாளி கமல மங்கலை

கந்தவீரமாகாளி கமல மங்கலை
கருணையான வடிவழகி கனிந்து நின்றனை
விந்தையாகி விளக்குமாகி விளங்கி வந்தனை
விண்ணுமாகி மண்ணுமாகி வெற்றிகண்டனை
மந்தமான புத்தியோட்டி மனமும் தந்தனை
மலரின் வேதன் உன்னைப் பாட மயக்கம் தீர்த்தனை
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

நந்தவீர மாகாளி நயனமாலினி
நம்பிவந்த எம்மிடையே நலனும் காட்டுவாய்
இந்தவாழ்வில் உன்னையன்றி இங்கு யாருளார்
இன்று நல்லகாலைவந்து இனிமை காட்டுவாய்
மந்தையாடு போலவாழ்வில் மயங்கி நில்லாமல்
முத்தியோடு செல்வபோகம் முழுதும் நாட்டுவாய்
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

பொங்குவீரமாகாளி பொய்மை தீர்மணி
பொறுமையோடு பெருமையாகிப் பொருளும் கூட்டினாய்
எந்தையான சிவனைத் தூது எடுத்து அனுப்பினாய்
எழிலியாகி வண்ணமாகி என்னுள் ஆடினாய்
பந்தணைந்த விரலி நீயும் பகைமை என்றதும்
பரந்துவந்து படைகளோட்டிப் பசுமை காட்டினாய்
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

விந்தைவீரமாகாளி விரைந்துவந்திடின்
சொந்தநோயும் வந்தநோயும் தொலைவில் ஓடிடும்
எந்தமாயம் எம்மைத்தேடி வந்த போதிலும்
என்னையீன்ற தாய் நினைப்பில் எரிந்து போய்விடும்
சிந்தைவாழும் உந்தன் மஞ்சள் சிறிது பூசிடின்
கந்தனோடு கரிய நீலகண்டன் காணலாம்
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

ஆதிசக்தி சோதிசக்தி ஆளவந்த சக்தியே
ஆகமங்கள் ஆனசக்தி ஆத்மசோதி சக்தியே
நீதிசக்தி நித்தியசக்தி நீறுபூசும் சக்தியே
நீலிசக்தி நிருத்தசக்தி நீலமேனி சக்தியே
காதிசக்தி கானசக்தி காணுமின்ப சக்தியே
காளிசக்தி காயசக்தி காட்சிதந்த சக்தியே
வீரசக்தி தீரசக்தி வீடுகாக்கும் சக்தியே
சூரசக்தி சூலசக்தி சூழும் சக்தி சக்தியே

துர்க்கா சரணம் சரணம் தாயே
துர்க்கா சரணம் சரணம்
தேவி சரணம் சரணம் தாயே
தேவி சரணம் சரணம்
அம்மா சரணம் சரணம் தாயே
அம்மா சரணம் சரணம்
ஆத்தாள் சரணம் சரணம் தாயே
ஆத்தாள் சரணம் சரணம்

Saturday, July 9, 2016

அரகர சங்கரி

அரகர சங்கரி நாரி மனோகரி
ஆதி புராந்தக அம்பிகையே
முரகரி மாதவ சோதரி மாதவி
மோகவிலாசினி முக்கனியே
மரகத ரூபிணி மாதுமனோன்மணி
மகபதி பாணிப வாணியளே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!

திருவருள் எங்கணும் தேக்கிட மங்கலச்
சீரறம் செய்யன்ன பூரணியே!
உருவருள் கொண்டுலகுய்ந்திட மாதவம்
ஓம்பிடும் காஞ்சியுமையவளே!
குருவருள் பொங்கிடக் குஞ்சித பாதமென்
கூப்பிய நெஞ்சினில் கோலிடுவாய்
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!

அருளுரு நெஞ்சினில் அம்புயக் கண்களில்
ஆட்சி புரிந்திடும் அன்னையளே!
பொருளுறு புன்னகை பொங்கிட வந்தருள்
பூங்கணை ஏந்திய பொன்மகளே!
மருவறு சேவடி வாழ்த்தி வணங்கிட
வல்லமை தந்தருள் வைணவியே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!

தனதன தந்தன தானன தந்தன
தாந்திடு தோமெனத் தாண்டவமே!
கனதனம் பம்பிடக் காற்சிலம்போங்கிடக்
காந்த கனன்றிடும் காளியளே!
மனதெனும் மன்றிலமர்ந்தனள் ஊக்கிடும்
மந்திர தந்திர மாமணியே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!

செகமதில் காணுமெச் சன்னிதியாயினும்
தேவியுன் ரூபமென் சிந்தனையே!
முகமதில் சந்திர பிம்பமெனும்படி
மோகனப் புன்னகை பூப்பவளே!
இகமதில் சாந்தியும் இல்லற மேன்மையும்
ஈந்திட வந்தருள் ஈகையளே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!


கலைநிறை கணபதி சரணம் சரணம்

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவணபவகுக சரணம் சரணம்
சிலைமலை உடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவருமொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்
முடியாமுதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர்மணியே சரணம் சரணம்
அடியார்க்கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

Tuesday, July 5, 2016

மீண்டும் ஜானு - 1



ஆடி மாதக்காத்துக்கு முகத்துக்கு முன்னால் வந்து முத்தமிடும் முடிக்கற்றையை ஒதுக்கிக்கொண்டு உதடுகளில் சிரிப்போடு வருவது அவளா? ஒரு காலத்தில் நான் விழுந்து விழுந்து ரசித்த கண்களில் மின்னும் குறும்பு காணாமல் போய் மாறாக ஒரு தெளிவு… சிரிப்பில் ஒரு மின்னல்…. வழக்கமாக சிரிக்கும் போது வாயை கையால் மூடிக் கொண்டு சிரித்து விட்டு கேட்டால் பல் மிதப்பு தெரியாமல் இருக்க என்பாளே…… அந்த மிதப்பினைக் காண முடியவில்லை……… பற்களுக்குக் கிளிப் போட்டிருக்க வேண்டும்… கொஞ்சம் குண்டாகி முகம் ச்சபியா இருந்தாலும் எனக்குத் தெரியும்… அது அவள் தான்… இத்தனைக்கும் நான் அவளை அருகில் பார்த்தது மிகவும் சொற்பம்…. ஒன்றிரண்டு நாட்கள் தான்… நாம் ஒரேயொரு நாள் இதற்கென்று சந்தித்துக் கொண்டதாக ஞாபகம்… அவளைச் சந்திக்கணும் எண்டு ஆசைதான்... ஆனா எப்பவாச்சும் எங்கயாச்சும் காண மாட்டோமா எண்டு ஏங்குறனான் எண்டு அவளுக்கு பொய் சொல்லுற அளவு மோசமில்லை...

முந்தி என்னோட தான் படிச்சவள்… அப்பேக்க அவவை அசின் எண்டு எங்களுக்க சொல்லுவம்…. இன்னொரு பேரும் இருக்கு… “விஜயசாந்தி” எண்டு… அவள் ஸ்கூலில பிறிபெக்டா இருந்தவள்… நடக்கும் போது சரியான ஃபாஸ்ற்றா ஒரு விதத் துள்ளலோட நடப்பாள்…. பெடியங்களை ரொக்கட் அடிக்குறதுக்கு சத்தம் போடுறதுக்கு எல்லாம் கண்ட மாதிரி ஏசுவாள்… அப்பேக்க எனக்கு அவள் எண்டாப் பயம்…. தனியத்தான் திரிவாள்… சைக்கிள் ஓடுறது கூட ஒரு வித்தியாசம்… சனிக்கிழமை முழுகிட்டு முடியை உயர்த்திப் போணி போட்டுட்டு அவள் நடந்து வரேக்க, அவளின்ர துள்ளல் நடைக்கு சுருள் முடியும் சேர்ந்து துள்ள, யாரா இருந்தாலும் திரும்பிப் பாத்துக் காமெடியாச் சிரிச்சுட்டுப் போவினம்… நாங்க கும்பலா இருந்து சிரிச்சிருக்கம்… அதையும் கண்டுக்காம முகத்தை முறைப்பா வைச்சுட்டுப் போகும் லூசு மாதிரி…

பிறகு எனக்கு ரெண்டாவது லவ்வும் ஃபெயிலியராகி கம்பஸ் கிடைச்சு அவளுக்கும் கம்பஸ் கிடைச்சு நாம காணுறதே கஸ்டம் எண்டுற ஒரு நிலமையில தான் எங்களுக்க பழக்கம் ஆரம்பிச்சுது… கான்ட் போனால… அதுவும் அவளா ஆரம்பிச்சது தான்… அதுக்குக் கூட ஒரு கதை சொன்னாள்….அது உண்மையோ பொய்யோ தெரியாது…..

நடையில் வழக்கமாக இருக்கும் துள்ளல் கொஞ்சம் கூடக் குறையாமல் இருந்தது…. வழமை போல் மஞ்சள், பச்சை, சிவப்பு என்று இல்லாமல் ஆடை மிகவும் எடுப்பாக இருக்கிறது… முன்பெல்லாம் கால்களிற்கு அருகில் இருக்கும் பாவாடை, இப்போது முழங்காலை மூடியும் மூடாமலும் இருக்கிறது… ம்… படிப்பு ஏற ஏற பாவாடையும் ஏறுது என்று எனக்குள்ளே சிரித்துக் கொள்கிறேன்…..

கண்களுக்கு மையிட்டிருக்கிறாள் என என்னால் அவ்வளவு தூரத்தில் இருந்து கூட கண்டுபிடிக்க முடிகிறது…. கீல்ஸில் ஏறி நிற்கிறாள்… அவள் என்னிலும் கட்டை… நான் ஒன்றும் பெரிதாகக் கட்டை கிடையாது… என் தம்பி வீட்டு நிலையை இடித்துக் கட்ட வேண்டும் என்று சொல்லிக் கிண்டல் அடிக்குற அளவு தான் கட்டை… நானே அவளை இந்த உயர விசயத்தில் நோண்டி போடும் அளவு அவள் கட்டை…

முடியைக் கட்டையாக வெட்டியிருக்கிறாள்… விரித்துப் போட்டால் பேய் என்று எல்லாரும் பயந்துடுவாங்க… மற்றவங்களைப் பயப்பிடுத்தக் கூடாது என்று சொல்லப்பட்ட அந்த முடியை என்னவோ பண்ணி விரிச்சு விட்டா மனேஜ் பண்ணக்கூடிய லெவலில இருக்குது… பெப்ரவரி ஃபோட்டீன் படத்தில ரேணுகாமேனனின்ர முடி மாதிரி சுருள் சுருளாக….. 

சுருட்டை முடிக்காரியளை நம்பக் கூடாது…. எண்டு நான் அவளைக் கலாய்த்திருக்கிறேன்…. அப்போதெல்லாம் ”ஆ… எனக்கு முழுகினாத்தான் சுருட்டையா நிற்கும்…” எண்டு சிணுங்குவாள்…. ”சரி… அவயளை பாதி நம்பக் கூடாது” எண்டு சொல்லக் கடுப்பாகி ”நம்ப முடியாத ஆக்களோட ஏன் கதைக்குறீங்க…. வையுங்க எண்டு” மரியாதையாக சொல்லி விட்டு போனைக் கட் பண்ணி விடுவாள்… பிறகு நான் எத்தனை தரம் அடிச்சாலும் ஆன்ஸர் பண்ணாது எருமை…சைலன்ரில போட்டுட்டு பாத்திட்டு சிரிச்சுட்டு இருப்பாள் போல…குரங்கு….  

சில நேரம் ஒஃப் பண்ணியும் விடுவாள்…  ”டயலொக் யூ கோல் இஸ் நொட் ரெஸ்போண்டட்….. பிளீஸ் ட்ரை எகெய்ன் லேற்றர்….” டயலொக் பெண்ணின் குரலை கேட்டாலும் நான் விடாம அடிப்பன்… எப்பவாச்சும் ஒன் பண்ணேக்க ஆன்ஸர் பண்ணாதா எண்டு ஒரு நப்பாசை… கல்லு மனசுக்காரி…ஓன் பண்ணவே மாட்டாள்…. 

அற்லீஸ்ற் ஒன் பண்ணேக்க எத்தினை மிஸ்ட் கால் அலேட் வந்திருக்கு எண்டுறதை வைச்சு நான் இத்தனை தரம் அடிச்சிருக்கன் எண்டு இரக்கம் வரும் எண்டு என் மனசில ஒரு நப்பாசை… சாட்டுக்கு டக்கு டக்குன்னு கோல் பண்ணிக் கட் பண்ணி ஆறு-ஏழு மிஸ்ட் கோல் ஆக்கிடுவன்… இல்லை என்றால் மகாராணி மனசு என்னில் இரக்கம் கொள்ளாது….
சனி – ஞாயிறு காலையில் குட்மானிங் மெசேஜில் தொடங்கி மெசேஜ் டைப் பண்ணுற பஞ்சியில கோல் பண்ணி ஆரம்பிக்கும் எங்கட சண்டை மத்தியானம் ”கொட்டிட்டியாடா எருமை மாடு?” என்று வரும் மெசேஜ் மேடத்துக்குக் கோபம் போயிட்டுது எண்டு சொல்லுவதுடன் நிறைவு பெறும்…… சண்டை போட்ட பின்னர் என்ன வேலை இருந்தாலும் பின்னேரம் தூங்கி எழுந்த பின்னர் மறுபடி கோல் செய்வேன்…
அப்போது அதிகமாக கொஞ்சிப் பேசுவாள்.. வாளி வைப்பாள்… நானும் சும்மா ஆளில்லை… நான் அண்டாவே வைப்பன்…. சும்மா தொடங்குகிற கதை மறுபடியும் சண்டையில் முடியும்… கடுப்பில் நான் கோல் பண்ணிப் பார்ப்பதில்லை… அது அவளுக்கும் தெரியும்…. அதனால் பின்னேர சண்டைகளின் போது அவளும் போனை ஓஃப் இல் வைப்பதில்லை… ம்.. சுருட்டை முடிக்காரியளை நம்பக்கூடாதுன்னு நான் சொன்னது பிழை… அவளை நான் தான் விட்டுட்டுப் போயிருக்கன்... அவள் என்னை வெறுக்கணும் எண்டு என்ன எல்லாம் செய்தன்... கண்கள் லேசாகத் துளிர்க்க அவள் விம்பம் சற்று மங்கலாகத்தெரிகிறது… கூடவே பத்திக் கொண்டு கோபமும்…. அந்த செம்மறிக்காக நான் ஏன் அழணும்…..? என்னில பிழை இல்லை எண்டு தெரிஞ்சும் ஃபேஸ்புக்கில என்னை அண்ஃபிரண்ட் பண்ணினவள்......பிறகு றிக்குவஸ்ற் குடுத்தா... நான் அட் பண்ணலையே... நீ மட்டும் திறமோ? அவளின்ர மெசேஜிற்கு ரிப்ளை பண்ணுறேல்லை... பாத்தா சீன் பை விழுந்திடும் எண்டு பாக்குறதுகூட இல்லை...

”என்ன வேணும் டாக்டர்?”

அம்மா தந்த லிஸ்ற்றைக் காணேல்லை….. இந்த ஆறுமுகம் எண்டவன் இண்டைக்கெண்டு மனிசிக்கு பிள்ளைப் பெறு எண்டு வடலியடைப்புக்குப் போட்டான்… வீட்ட வேலைக்கு வரேல்லை….. நான் இருக்குற ரென்சனுக்க இதை எங்க வைச்சன் எண்டு தெரியேல்ல….

ஒரு கிலோ கத்தரிக்காய் மட்டும் தான் ஞாபகம்… இண்டைக்கு வீட்ட இறைச்சி காய்ச்சணும்… நாங்க சைவம்... கம்பஸ் வந்து நான் மச்சத்துக்கு மாறிட்டன்... அம்மா மட்டும் மாற மாட்டாவாம்...வரட்டுக் கவுரவம்.. அவட உடம்பு கிடக்குற கிடைக்கு... பட் கத்தரிக்காய் மஸ்ற்…. எனக்கு முந்தி சமைக்கத் தெரியாது…. அதாவது பரவால்ல… சமைக்குறதுக்கு என்னென்ன வேணும் எண்டுறது கூடத் தெரியாது… அந்தப் பக்கம் சாப்பிட மட்டும் தான் போறது… 

அப்ப அவளுக்கு சமைக்கத்தெரியாது எண்டு நான் அடிக்கடிக் கிண்டல் பண்ணுவன்…. றூம் எடுத்துக் கம்பஸில படிக்க எண்டு இருந்த மூட்டம் கூட சேர்ந்து இருக்குற பிள்ளையள் தான் அவளுக்கு ரீயே போட்டுக் கொடுக்குறது… லூசு.. எனக்கு தோசைக்கு மா கரைச்சுத் தந்தா நான் தோசை சுடுவன்… உனக்கு அதுவும் தெரியாது எண்டு கடிப்பேன் – ஒருக்கா அம்மா கரைச்சுத் தந்த மாவை தோசைக் கல்லை எண்ணெய்ச்சீலையால துடைக்காமல் சுட்டு எடுக்க வெளிக்கிட்டுப் பிச்சு, தோசை பிரமாதம் எண்டு தம்பி சொல்ல அவனுக்கு தட்டேப்பையால எறிஞ்சு அவன் குழறி அம்மாட்டப் போட்டுக் குடுத்துக் கலவரம் ஆன கதை எல்லாம் அவளுக்குத் தெரியாது எண்ட தைரியத்திலை…..

அவள் எங்கேயெண்டு பாத்தன்…. நிண்டுகொண்டு போன் கதைச்சுட்டிருந்தாள்…. போனின் கவர் நீட்டிக்கொண்டிருந்தது…. லேற்றஸ்ற் மொடல் போன் எண்டு நினைக்குறன்… அப்பெல்லாம் அவள் வைச்சிருந்த போனிலை போட்டோ கூட எடுக்க முடியாது… நோக்கியான்ர கதைக்குறதுக்கு மட்டும் பாவிக்குற போன் தான் அவளிட்ட இருந்திச்சு…. அது கூட கோல் கதைச்சுட்டு இருக்கும் போது இடையில கவரேஜ் போய் கட் ஆயிடும்… அது என்ர பிழை எண்டு நான் காட்டுக்க இருக்குறதால தான் கவரேஜ் கிடைக்குதில்லை எண்டு கத்துவாள்…. இத்தனைக்கும் ஒரு நாள் கூட நான் இருக்குற இடம் எப்பிடி இருக்கும் எண்டு வந்து பாத்தது கிடையாது… நானும் அப்பிடித்தான்…… பிறகு நான் கட் பண்ணுறன் எண்டு தொடங்க – நான் ஏன் கட் பண்ணணும் எண்டு கேட்க – என்னோட கதைக்க விருப்பமில்லை எண்டு சொல்ல- நான் சொல்லுறதை நம்பேல்லத்தானே? நம்பிக்கை இல்லாதவங்களோட ஏன் கதைக்குறீங்க எண்டு சொல்லி நான் கோலை கட் பண்ணி ஒஃப் பண்ணிடுவன்….
ஆனா நமக்கு மனசுக்க ஒரு நப்பாசை…நம்மளை மாதிரி அவளும் எடுத்துப் பாப்பாளோ எண்டு…. இடையில லைற்றா ஒன் பண்ணிப் பாப்பன்… போன் ஒஃப் இல இருக்கேக்க என்னைக் கொஞ்சி “புன்னகை மன்னன், செல்லம்” என்றெல்லாம் கொஞ்சி அவள் அனுப்பியிருக்கும் மெசேஜ்கள் பெண்டிங் இல இருந்து டிலிவேட் ஆயிடும்… உடனேயே அமத்தி ஓஃப் பண்ணிடுவன்…. ஆனா பிடிபட்டிடும்…. அவளா… கொய்யால… சில நேரம் சண்டை பிடிச்சா எனக்கு வேலை இருந்தா – இவளோட மல்லுக் கட்டேலா எண்டு போனை ஒஃப் பண்ணிடுவன்…. அப்புறமா தன்ரை போனில தான் பிரச்சினை எண்டு ஒத்துக் கொண்டா….

யார் சண்டை பிடிச்சாலும் விசர்ப் பிடிக்குறது என்னவோ எனக்குத் தான்…. அந்த குட்டி (அல்லது குட்டை) ராட்சசியோட சண்டை போட்டுட்டு என்னால ஒண்டுமே கிழிக்க ஏலாது… அதெல்லாம் அவளுக்கு சொல்லியிருக்கன்…..  அவளை அழகு எண்டு சொல்லி வர்ணிக்க அத்தனையும் உனக்குத்தான் எண்டவள்... அப்பிடியெல்லாம் இருந்த உறவு....
 
கல்யாணம்…… அவளுக்கு ஆகியிருக்கலாம்….

அவள் முகத்தைப் பார்த்தேன்…. நெற்றியில் வந்து மோதிய முடிக்கற்றையை எனக்காக எடுத்து விட்டது போல எடுத்து விட்டாள்….. நெற்றியில் குங்குமப் பொட்டு இல்லை… அற்லீஸ்ற் சிவப்புக் கலர் ஸ்ரிக்கர் கூட இல்லை… 

ஸ்ரைல்…. பொட்டு வைக்காத ஸ்ரைல்… புருசனுக்காகப் பொட்டுக் கூட வைக்காத ஸ்ரைல்…. அப்பவே சிங்களத்தியள் மாதிரி ஸ்ரைலா பொட்டு வைக்காமத்தான் திரிவாள்... அவள் சொன்னமாதிரி கல்யாணம் முடிக்கலை எண்டுறதை நான் நம்பத் தயாரில்லை.. ஏன்னா அவளுக்கு ஆசை அதிகம்... அந்த ஆசை பேச்சில கொஞ்சும்.... டேய் நீ மட்டும் குறைவா? லவ் பண்ணின மூட்டம் லெக்சர்ஸ் கூட என்னால கொன்சன்றேற் பண்ணேலா... அவ்வளவு மோசம் நான்.... ஆனாப் பயம்... எங்க என்ரை லவ்வை அவ்வளவுதான் எண்டு நினைச்சுடுவாளோ எண்டு...

ஸ்ராட்டில எனக்கும் அவளுக்கும் காதல் எண்டு புரளி வந்த மூட்டம்- டீ போட்டுப் பேசுறது மனிசிக்கு அல்லது லவ்வருக்கு மட்டும் தான் சரியெண்ட கருத்தையும் போட்டு நான் இனி உன்னை டீ போட்டுக் கூப்பிட மாட்டன்ரீ எண்டு ஃபேஸ்புக்கில மெசேஜ் போட்டன்… அதையும் நாங்க விடல்லை… பாக்குறதில்லை எண்டுறது மட்டும் தான் ஒரு குறையே தவிர உடனுக்குடன எனக்கு அவள் எங்க இருக்குறாள் எண்டும் அவளுக்கு நான் எங்க இருக்குறன் எண்டும் ஜாவாட ஒப்சேவர்- ஒப்சேவபிள் கான்செப்ட் மாதிரி உடனேயே அப்டேட் ஆகிடும்… ரெண்டு பேரும் ஒப்சேவர்- ரெண்டு பேரும் ஒப்சேவபிள்… மோஸ்லி நான் ஒப்சேவபிள் தான்… அவளுக்கு சுதந்திர மனப்பான்மை அதிகம்… எல்லா நேரமும் தான் போற இடம் பற்றி சொல்வதில்லை…. 

அடுத்த நாள் குட்மோனிங் மெசேஜ்…. அவள் தான் முதல்ல போட்டாள்…. இது கூட சண்டையாகி இருக்குது… யார் முதல்ல குட்மோனிங் போடுறது எண்டு… “நான் போடாட்டி நீ போட்டிடாத” எண்டு ஏளனமாக கடுப்புடன் சொல்வாள்… பிறகு நான் கடுப்பில வைச்சிடுவன்…. “கடுப்பாயிட்டியா” எண்டு மெசேஜ் வரும்… தெரியாதா உனக்கு செம்மறி….. முந்தி நான் ”ம்ம்…” எண்டு ரிப்ளை பண்ணினா….. “என்ன செய்தா கடுப்புப் போகும்” எண்டு வரும் மெசேஜ் பிறகு ”ஐ ஜாலி” எண்டும் “கடுப்பானாப் பரவால்ல” எண்டும் மாறிட்டுது…….

“குட்மோனிங் புருஸ்”

“புருஸ் எண்டா என்ன”

“புருசனை செல்லமா புருஸ் எண்டு….”
”புருசனோ???”

“டீ போடுறதுக்கு புருசனா இல்லை இருக்கணுமாம்… ” எண்டு கூடவே :p சிம்பல்….

எனக்கு சிரிப்பு… 

“ஐ ஆம் ப்றவுட் டு பீ யுவ புருஸ்”

”லூசு.. இது என்ன பதவியா… பெருமைப்பட….”

எங்கட மெசேஜ் சம்பாசணை முடிந்திருந்தது… எங்களுக்குள்ள நடக்குற குட்டி குட்டி சண்டையளை விட – இல்லை ரணகளங்களை விட பெரிய ஒரு ரணகளம் நடக்குறதுக்கு அதுவும் ஒரு மூலகாரணம்…..

அவள் இப்போது என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்… 

’ஓடலாமா… சீ நான் ஏன் ஓடணும்… தெரியாத மாதிரி நிற்பம்..’ எனக்கு ஒண்டும் இது புதுசில்ல... கதைக்காம விட்டாப் பிறகு அவளைக் காண நேர்ந்தா செய்யுறது தானே...

நான் அங்கால மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு கடைக்கண்ணால அவளைப் பார்த்தேன்…. அவள் என்னைப் பார்க்கவில்லையா இல்லைப் பார்க்காதது மாதிரி நடிக்கிறாளா? 

அப்பிடியே வந்து என்னைக் கடந்து போய் விட்டாள்…. என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை… பார்க்காதது மாதிரிக் காட்டிக் கொள்ளவுமில்லை… முன்னால் வழியைப் பார்த்துக் கொண்டு…. அவள் என்னைக் கடந்து போன போது என் பிடிவாதம் அவளோடு ஓடிப் போய் விட்டது… அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ”கண்ணுக்குட்டி ஐ லவ் யூ” எண்டு அழணும் போல இருந்தது… அவ்வாறு செய்யாமல் கைகளை இறுக்கப் பொத்திக் கொண்டேன்…

”என்னோட எல்லோரோடையும் பழகுற இந்தப் பழக்கத்தை நீ தப்பாப் புரிஞ்சிட்டாய்… என்ன வேணும் எண்டாலும் நான் பசங்களோட கதைப்பன்….பட்…பசங்களுக்கு கை குடுக்குறதைக் கூட நான் அசிங்கமா நினைப்பன்…” இது முந்தி ஒருக்கா அவள் சொன்னது…. அதோட அவள் இப்ப வேற ஒராளின்ர மனிசி... எப்பிடி முடியும்...

அப்பிடின்னா இத்தனை வருசமா இல்லை எண்டுற மாதிரி ஒழிச்சு வைச்சிருந்த என் காதல் மீண்டும் வெளிய வந்திட்டா? அம்மாக்கு செய்து கொடுத்த சத்தியம்... எனக்கு கண்ணீர் முட்டியது........

”சார் என்னாச்சு…..?”

“ஒண்டுமில்லை…. நான் வாறன்….”

நான் விறு விறு என்று நடந்துகொண்டிருந்தேன்…..

Friday, July 1, 2016

மருந்து காய்ச்சும் எண்ணெய்

மருத்துவப் பொருட்களை எண்ணெயாக உபயோகிக்க காய்ச்சும் எண்ணெயாக நல்லெண்ணெய் பயன்படும்.. இது தோலில் உள்ள துவாரங்களைத் திறந்து மருந்துப் பொருள் சேர உதவும்... தேங்காய் எண்ணெய் துவாரங்களைப் பூட்ட வல்லது..

மூக்குக்குள் ஏதாவது போனா.........

சின்னப் பிள்ளைகள் மூக்குக்க ரெஜிபோம், கடலை மாதிரியான சின்ன சின்னப் பொருட்களை ஓட்டிடிச்சு எண்டா பயப்பிடாதீங்க...

எந்தப் பக்க மூக்குக்க போச்சோ, மற்ற மூக்குத் துவாரத்தை அடைச்சுக் கொண்டு வாய்க்குள்ள ஊதினா வெளிய வந்திடும்...

பூச்சித் தொல்லைக்கு

வயிற்றில் ஏற்படும் பூச்சியால், பசியின்மை, கண் கடித்தல், மலவாசல்-சலவாசல் கடித்தல், வாந்தி வருவது போன்ற உணர்வு, கைகால்களில் அரிப்பு போன்றன ஏற்படும்..

இதற்கு வெந்தயம் விழுங்கிவர சரியாகிவிடும்...

வெந்தயம் முகப் பொலிவைத் தரும்...

மலம் வெளியேறலை சீராக்கும்...

தலைமுடி உதிர்தலை நிறுத்தும்...

உஸ்ண தேகம் கொண்டோர் வைத்திருக்க வேண்டிய கைமருந்து....

ஆஸ்மா நீங்க..

10 கிராம் பிரமதண்ட (குடியோட்டிப்பூண்டு) வேரை அரை லீற்றர் நீரில் அவித்து கால் லீற்றர் ஆகும் வரை காய்ச்சி ஆறவிட்டு 48 நாள் அந்தி, சந்தி குடித்தால் ஆஸ்மா நீங்கும்.

முட்டு நீங்க

கற்பூரவள்ளி, தேன், சின்ன வெங்காயம் மூன்றையும் நன்றாகக் காய்ச்சிப் பருகவும்..

வாய்வுத் தொல்லைக்கு...

வாய்வுத் தொல்லையால் நெஞ்சுக்குள் குத்துதல், உடற்பாகங்கள் துடித்தல், விக்கல் முதலிய பல பிரச்சினைகள் வரும்...

இதற்கு பெருங்காயம் சிறிதளவு எடுத்து பல்லில் படாமல் விழுங்கினால் சரியாகிவிடும்...

கட்கட்டி

கட்கட்டிங்குறது கண்ணு வீங்கி வாற ஒரு தொற்று வியாதி... இதுக்கு பூனை ஒன்றின்ர வாலால கண்ணில தடவிட்டு வர மாறிடும்....

பாலுண்ணிக்கு மருத்துவம்

பாலுண்ணி எண்டுறது கறுப்பா கட்டி மாதிரி உடம்பில வளரக்கூடிய ஒரு பொருள்.... அதுக்கு தலைமுடியால சுத்திக் கட்டினா ரெண்டு கிழமைல விழுந்துடும்....  நம்புங்க.... நான் ட்றை பண்ணினன்....

ராசிகளின் வகை

சர ராசிகள் மேசம், கடகம், துலாம், மகரம்
ஸ்திர ராசிகள் இடபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்
உபய ராசிகள் மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்

ஜல ராசிகள் கடகம், விருச்சிகம், மீனம்

கேந்திரம், திரிகோணம்

திரிஷடய வீடுகள்  3,6,11

கேந்திரம் என்பது லக்கினத்தில் இருந்து 1, 4, 7,10ஆம் வீடுகள்

திரிகோணம் என்பது லக்கினம், 5, 9 ஆம் வீடுகள்.

Thursday, June 30, 2016

கலைவாணி நின்கருணை தேன்மழையே!

கலைவாணி நின் கருணை தேன் மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

(கலைவாணி)அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி

(கலைவாணி) மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லய பாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்

(கலைவாணி) வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் கானம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்

(கலைவாணி)